மல்லை சத்யா மீது நடவடிக்கை தலைமை முடிவெடுக்கும்: துரை
மல்லை சத்யா மீது நடவடிக்கை தலைமை முடிவெடுக்கும்: துரை
ADDED : ஜூலை 12, 2025 03:04 AM
திருச்சி:ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை அளித்த பேட்டி:
தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக ம.தி.மு.க.,வும், வைகோவும் உள்ளனர். வைகோவை, 'பொய்க்கோ' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், கூறியது, அவரது கருத்து. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
ம.தி.மு.க., துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யா, கட்சி மற்றும் தலைமைக்கு எதிராக நடப்பது தெரிய வந்திருக்கிறது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, தலைமை முடிவெடுக்கும்.
தி.மு.க.,வில் இணைந்தவர்கள் எல்லாம், ம.தி.மு.க.,வில் இருந்து முன்பே விலகியவர்கள் தான். புதிதாக யாரும் சேர்க்கப்படவில்லை. கட்சியில் இருந்து கொண்டு பலர், தலைமைக்கு எதிராக துரோகம் செய்து வருகின்றனர். அவர்கள், வேறு கட்சிகளுக்கு செல்லலாம். ம.தி.மு.க.,வுக்கு 12 சீட் வேண்டும் என கேட்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.