sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மன்னராட்சி மன நிலைக்கு 2026ல் முடிவு: அண்ணாமலை

/

மன்னராட்சி மன நிலைக்கு 2026ல் முடிவு: அண்ணாமலை

மன்னராட்சி மன நிலைக்கு 2026ல் முடிவு: அண்ணாமலை

மன்னராட்சி மன நிலைக்கு 2026ல் முடிவு: அண்ணாமலை


ADDED : ஜன 16, 2025 09:22 PM

Google News

ADDED : ஜன 16, 2025 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:

மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண, தன் மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்ற துணை முதல்வர் உதயநிதி, ஜல்லிக்கட்டு விழா மேடையில், தன் மகனின் நண்பர்களை அமர வைக்க, நாற்காலியில் அமர்ந்திருந்த, மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவை, மேடையில் இருந்து அகற்றி இருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உதயநிதி தனது மகனின் நண்பர்களுக்காக, பெண் கலெக்டரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான, தி.மு.க.,வின், 2006 - 11 ஆட்சி காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம். முதல்வர் குடும்பத்துக்கு சேவகம் செய்வதற்காகவே இருக்கும், அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள். உதயநிதிக்கு 2011 தேர்தல் முடிவுகளும், அதற்கு பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள், 2026ல் முடிவு கட்டுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us