sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இ.பி.எஸ்., வீட்டில் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு

/

இ.பி.எஸ்., வீட்டில் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு

இ.பி.எஸ்., வீட்டில் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு

இ.பி.எஸ்., வீட்டில் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு


ADDED : பிப் 21, 2024 03:34 AM

Google News

ADDED : பிப் 21, 2024 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., வீட்டில் புகுந்த மர்ம நபரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை அபிராமபுரம் பசுமை வழிச்சாலையில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் வீடுகள் உள்ளன. அந்த பகுதியில், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர்.

சட்டசபைக்கு சென்றிருந்த பழனிசாமி நேற்று மதியம், 1:00 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, மர்ம நபர் ஒருவர், போலீசார் தடுத்து நிறுத்தியும் கேட்காமல், பழனிசாமியின் வீட்டிற்குள் புகுந்தார்.

பாதுகாப்பு போலீசார், கார் நிறுத்தும் பகுதிக்குள் அந்த நபரை மடக்கிப் பிடித்து, அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 28. என்பது தெரியவந்தது.

சொந்த ஊரில் கோவில் கட்டி வருவதாகவும், அதற்கு நிதியுதவி கேட்கவே, பழனிசாமி வீட்டிற்கு வந்ததாகவும், போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, வெங்கடேசனை எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us