sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'பட்டிதொட்டிக்கெல்லாம் செஸ்சை அறிமுகம் செய்தவர்'

/

'பட்டிதொட்டிக்கெல்லாம் செஸ்சை அறிமுகம் செய்தவர்'

'பட்டிதொட்டிக்கெல்லாம் செஸ்சை அறிமுகம் செய்தவர்'

'பட்டிதொட்டிக்கெல்லாம் செஸ்சை அறிமுகம் செய்தவர்'

5


ADDED : டிச 18, 2024 01:02 AM

Google News

ADDED : டிச 18, 2024 01:02 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''பட்டிதொட்டி எல்லாம் செஸ் விளையாட்டை அறிமுகம் செய்துள்ளார் குகேஷ்,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார். அவர் மேலும் கூறியதாவது:

நாட்டிலேயே செஸ் என்றால் சென்னை என்ற புகழ் குகேஷ் போன்ற வீரர்களால் கிடைத்துள்ளது. தன் 11வது வயதில், ஜூனியர் உலக செஸ் சாம்பியன் பட்டத்தையும், 18வது வயதில் சீனியர் உலக செஸ் சாம்பியன் பட்டத்தையும் பெற்று, உலகின் இளம் வயது சாம்பியனாகி, நமக்கெல்லாம் புகழை ஈட்டித் தந்துள்ளார்.

குகேஷ் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறும் போதும், தமிழக அரசு ஊக்கத்தொகை அளித்து, அவரை ஊக்கப்படுத்தியது. இந்த வெற்றியால், பட்டிதொட்டிக்கு எல்லாம் செஸ் விளையாட்டை அறிமுகம் செய்துள்ளார். இனி, கிராமங்களில் இருந்தும் சாம்பியன்கள் உருவாக இது உதவும்.

இவ்வாறு உதயநிதி பேசினார்.

முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பேசியதாவது:

நான், 30 ஆண்டுகளுக்கு முன் உலக செஸ் சாம்பியன் ஆனபோது அன்றைய முதல்வர் கருணாநிதி பாராட்டு விழா நடத்தி, உற்சாகப்படுத்தினார். இன்று அதேபோல், குகேஷ் இளம் வயது சாம்பியனாகி, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துகிறார். இது மகிழ்ச்சியான அனுபவம்.

திறமை மட்டுமின்றி, அர்ப்பணிப்பு உணர்வு, நினைவுத்திறன், ஒருநிலைத்தன்மை உள்ளிட்டவற்றால் குகேஷ் இந்த வெற்றியை பெற்றுள்ளார். வென்ற்றாலும், தோற்றாலும் திறந்த மனதோடு அதன் பின்னணியை ஊடகர்களுக்கு விளக்குகிறார்.

தோல்வியில் துவளாமல் அடுத்த போட்டிக்கு தயாராகிறார். இந்த குணம், என்னை ஈர்க்கிறது. இது ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் அவசியம் இருக்க வேண்டிய குணம். உலகின் செஸ் தலைநகரமாக தமிழகம் உருவாகும் காலம் தொலைவில் இல்லை.

இவ்வாறு ஆனந்த் பேசினார்.






      Dinamalar
      Follow us