sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்

/

அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்

அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்

அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்

2


ADDED : பிப் 11, 2025 06:51 AM

Google News

ADDED : பிப் 11, 2025 06:51 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் தண்டாயுதபாணி கோயில் அர்ச்சகர்கள் தட்டி விழும் காணிக்கைகளை உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு , ஹிந்து அமைப்புகளின் எதிர்ப்பால் திரும்ப பெறப்பட்டது.

மதுரை நேதாஜி ரோட்டில் தண்டாயுதபாணி கோயில் உள்ளது. அறநிலையத்துறையின்கீழ் உள்ள இக்கோயிலின் நிர்வாக அதிகாரியாக இருப்பவர் அங்கயற்கண்ணி. பிப். 7 காலை அர்ச்சகர்கள் முத்து ராமன், வீரபாகு ஆகியோர் பூஜை செய்து தீபாராதனை காட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீபாராதனை தட்டில் பக்தர்கள் செலுத்தும் கட்டணத்தை கோயில் உண்டியலில் செலுத்துமாறு அங்கயற்கண்ணி தெரிவித்தார். இதுதொடர்பாக பக்தர்கள் முன்னிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டார். இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இதுதொடர்பாக அங்கயற்கண்ணியிடம் மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை விளக்கம் கேட்டுள்ளார்.

செல்லத்துரை தெரிவித்துள்ளதாவது:


இக்கோயில் அர்ச்சகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுவதால் ஆரம்ப காலத்திலிருந்து பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கைகள் கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்துவருகிறது.

இருப்பினும் கோயில் நிர்வாக அதிகாரியால் தட்டு காணிக்கை தொடர்பாக பிறப்பித்த உத்தரவு அவராலேயே திரும்ப பெறப்பட்டுள்ளது. தக்காரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்தது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us