மக்களின் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் அபாயம்
மக்களின் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் அபாயம்
ADDED : நவ 21, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநில உரிமைகளை பறிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். மாநிலங்களுக்கு நிதி பகிர்வு சரியாக தருவதில்லை. தற்போது மதுரை, கோவைக்கு கேட்கப்பட்ட மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. பல வகைகளில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.
எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கொண்டு வந்து, பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஓட்டுரிமையை பறிப்பதை, தெளிவாக பார்க்க முடிகிறது. அவசர கதியிலும், செயல்படுத்த வேண்டிய அவசியமே இல்லாத காலத்திலும், அதை செயல்படுத்தி வாக்காளர் உரிமைகளை பறிக்க முயற்சிக்கின்றனர். இதனால், எதிர்காலத்தில், குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் நிலையை உருவாக்கும் அபாயம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- கனிமொழி தி.மு.க., - - எம்.பி.,

