sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடலில் தங்க கட்டிகள் தேடும் பணி 3வது நாளாக தொடர்ந்தது

/

கடலில் தங்க கட்டிகள் தேடும் பணி 3வது நாளாக தொடர்ந்தது

கடலில் தங்க கட்டிகள் தேடும் பணி 3வது நாளாக தொடர்ந்தது

கடலில் தங்க கட்டிகள் தேடும் பணி 3வது நாளாக தொடர்ந்தது


ADDED : பிப் 26, 2024 12:09 AM

Google News

ADDED : பிப் 26, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் நேற்று மூன்றாவது நாளாக இந்திய கடலோர காவல் படை வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் , கடத்தல்காரர்கள் வீசிய 10 கிலோ தங்க கட்டிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இலங்கையில் இருந்து பிப்.23ல் மன்னார் வளைகுடா கடல் வழியாக பைபர் கிளாஸ் படகில் ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளை கடற்கரைக்கு 10 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி வந்தனர்.

இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பலை கண்டதும் கடத்தல்காரர்கள் தங்கக் கட்டிகளை கடலில் வீசிவிட்டு தப்ப முயன்றனர். இதில் இருவர் சிக்கினர். ஒருவர் கடலில் குதித்து தப்பினார்.

கைதான இருவரின் தகவலில் கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்க கட்டிகளை 2 நாள்களாக தேடியும் கிடைக்கவில்லை. மூன்றாம் நாளான நேற்றும் இந்திய கடலோர காவல் படையின் ஸ்கூபா டைவிங் வீரர்கள், கடலுக்குள் மூழ்கி சங்கு எடுக்கும் மீனவர்கள் 3 பேர் என 10 பேர்தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்றும் மாலை வரை கிடைக்கவில்லை.






      Dinamalar
      Follow us