sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாரணாசியில் தவித்த வீரர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்

/

வாரணாசியில் தவித்த வீரர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்

வாரணாசியில் தவித்த வீரர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்

வாரணாசியில் தவித்த வீரர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர்

1


ADDED : பிப் 21, 2025 02:43 AM

Google News

ADDED : பிப் 21, 2025 02:43 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வாரணாசியில் தவித்த மாற்றுத்திறனாளி வீரர்களை, விமானத்தில் அழைத்து வர, தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை ஏற்பாடு செய்தது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், பிப்.,16, 17, 18ம் தேதிகளில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில், தென்னிந்திய அணி சார்பில், தமிழகத்தை சேர்ந்த ஆறு வீரர்கள், ஒரு மேலாளர் என, ஏழு பேர் பங்கேற்றனர். அவர்கள், நேற்று முன்தினம் அதிகாலை 1:30 மணிக்கு, வாரணாசியில் இருந்து கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வர முன்பதிவு செய்திருந்தனர்.

தற்போது, மகா கும்பமேளா நடப்பதால், அந்த ரயிலில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது. இதனால், அவர்களால் ரயிலில் ஏற முடியவில்லை. தங்களை அழைத்துச் செல்ல, தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்டனர். இந்த தகவல் அறிந்ததும், அவர்களை விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி, துணை முதல்வர் உதயநிதி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறியதாவது:

வாரணாசியில், தமிழகத்தை சேர்ந்த ஏழு பேர், ரயிலில் ஏற முடியாமல் தவித்த தகவல் அறிந்ததும், அவர்களிடம் பேசி ஆறுதல் கூறினோம். நேற்று மதியம், 1:30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூருக்கும், இரவு, 7:30 மணிக்கு, பெங்களூருவில் இருந்து சென்னைக்கும் விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us