sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவில் வடிவில் மேடை, ருத்ரவன்னியர் சிலை ஆன்மிக அடையாளத்திற்குள் செல்லும் பா.ம.க.,

/

கோவில் வடிவில் மேடை, ருத்ரவன்னியர் சிலை ஆன்மிக அடையாளத்திற்குள் செல்லும் பா.ம.க.,

கோவில் வடிவில் மேடை, ருத்ரவன்னியர் சிலை ஆன்மிக அடையாளத்திற்குள் செல்லும் பா.ம.க.,

கோவில் வடிவில் மேடை, ருத்ரவன்னியர் சிலை ஆன்மிக அடையாளத்திற்குள் செல்லும் பா.ம.க.,


ADDED : பிப் 11, 2025 07:31 PM

Google News

ADDED : பிப் 11, 2025 07:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கும்பகோணம் சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டில், ஐராதீஸ்வரர் கோவில் வடிவில் மேடை, ருத்ரவன்னிய மகாராஜன் சிலை என, முழுக்க வன்னியர் மற்றும் ஆன்மிக அடையாளத்தை, பா.ம.க., கையிலெடுத்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு பின், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், வரும் 23ம் தேதி கும்பகோணம் அருகே தாராசுரத்தில் மாநாடு நடக்கவுள்ளது. இதற்கு, 'சோழ மண்டல சமய. சமுதாய நல்லிணக்க மாநாடு' என, பெயரிடப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், இந்த மாநாட்டை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வன்னியர் சமுதாயத்தின் முழுமையான ஆதரவை பெறும் வகையில், கும்பகோணம் மாநாட்டு ஏற்பாடுகளை, பா.ம.க., செய்து வருகிறது.

'தமிழகத்தில் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்துவதில், நம்மை விஞ்சியவர்கள் எவரும் இல்லை என்று அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், கும்பகோணம் மாநாடு வெற்றிகரமாக அமைய வேண்டும். அதற்காக பா.ம.க.,வினர், குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் போர் முரசு கொட்டி வர வேண்டும். மாநாட்டில் பங்கேற்பதற்கு பயணிக்கத் தேவையான வாகன முன்பதிவுகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும். மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கூடுவதை உறுதி செய்ய வேண்டும்' என, ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாராசுரத்தில் உள்ள ஐராதீஸ்வரர் கோவில் வடிவில் மாநாட்டு மேடையும், மாநாடு நடக்கும் திடலின் முகப்பில், யாகத்திலிருந்து உயிர்பெற்று வரும் ருத்ரவன்னிய மகாராஜனின் உருவச் சிலையும் அமைக்கப்பட உள்ளதாகவும் பா.ம.க.,வினர் தெரிவித்தனர்.

மாநாட்டு விளம்பரங்கள் அனைத்திலும் ருத்ரவன்னிய மகாராஜன் படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என, ராமதாஸ் ஏற்கனேவே உத்தரவிட்டுள்ளார். வன்னியர் சங்க தலைவராக இருந்த, மறைந்த காடுவெட்டி குரு மற்றும் வன்னியர் வரலாற்று வீடியோ, ஆடியோ பதிவுகளை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பா.ம.க.,வினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

பா.ம.க., தலைமை அலுவலகமாக செயல்படும், ராமதாஸ் வசிக்கும் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், காரல் மார்க்ஸ், அம்பேத்கர், ஈ.வெ.ரா., சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கட்சி நடத்தும் மாநாட்டில் கோவில் வடிவில் மேடை, ருத்ரவன்னிய மகாராஜன் சிலை என, முழுக்க வன்னியர், ஆன்மிக அடையாளத்தை பா.ம.க., கையிலெடுத்துள்ளது. வன்னியர்களை முழுமையாக ஒருங்கிணைக்கும் முயற்சியாக இது நடக்கிறது; இதற்கு என்ன பலன் கிடைக்கும் என தெரியவில்லை என, பா.ம.க.,வினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us