ADDED : அக் 06, 2025 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் சம்பவம் தொடர்பான நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஒரு நிகழ்வை காரணம் காட்டி, அரசியல் கட்சி நிகழ்ச்சிகளை தடை செய்வது ஏற்க முடியாதது.
மதுரை, திருநெல்வேலியில், நான் மேற்கொள்ளவிருந்த பயணத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில், எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்க, காவல் துறை மறுக்கிறது. பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான விதிகள் வகுக்கும் வரை, எந்த முடிவும் எடுக்க முடியாது என, தட்டிக் கழிக்கிறது. இது, ஜனநாயக கடமையை நிறைவேற்ற விடாமல், அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் செயல்.
- அன்புமணி , தலைவர், பா.ம.க.,