sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குளித்தலை அருகே மருதூர் ரயில்வே பாதையில் குகைவழிப்பாதை அமைக்கும் பணி தீவிரம்

/

குளித்தலை அருகே மருதூர் ரயில்வே பாதையில் குகைவழிப்பாதை அமைக்கும் பணி தீவிரம்

குளித்தலை அருகே மருதூர் ரயில்வே பாதையில் குகைவழிப்பாதை அமைக்கும் பணி தீவிரம்

குளித்தலை அருகே மருதூர் ரயில்வே பாதையில் குகைவழிப்பாதை அமைக்கும் பணி தீவிரம்


ADDED : ஜூலை 16, 2024 08:51 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 08:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை அருகே மருதூர் ரயில்வே பாதையில் குகைவழிப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சி மருதூர் _மேட்டு மருதூர் நெடுஞ்சாலையில் ரயில்வே கேட்டு உள்ளது.

இந்த ரயில்வே கேட்டில் குகை வழி பாதை அமைக்கும் பணி கடந்த 2019 தொடங்கியது.

பல்வேறு பணியின் காரணமாக இந்த ரயில்வே கேட்டில் குகை வழி பாதை அமைக்கும் பணி நிறுத்தம் செய்யப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 20 தேதி குகை வழிப் பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

இன்று மதியம் 12 மணி முதல் இரவு. 6.30 மணி வரை ரயில்வே போக்குவரத்து நிறுத்தம் செய்து, சேலம் ரயில்வே கோட்ட தலைமை பொறியாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட ரயில்வே மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மூலம் கிரேன் இயந்திரங்கள் உதவியுடன் குகை வழி பாதை காண சிமெண்ட் கட்டைகள் அமைக்கப்பட்டது.

இந்த புகைவழிப்பாதை மூன்று மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேட்டு மருதூர், கூடலூர், பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, நல்லூர், உள்ளிட்ட பல கிராம பொதுமக்கள் குளித்தலை மற்றும் பெட்டவாய்த்தலை வழியாக செல்லும் போது மருதூர்- மேட்டுமருதூர் சாலை வழியாக செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

குகை வழிப்பாதை அனைத்து பணிகளும் முடியும் வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிராமப் பகுதி பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுவதற்கு மாற்று பாதையாக பட்டவர்த்தி குகைவழிப்பாதை வரை ரயில்வே நிர்வாகம் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் ரயில்வே பாதையின் தென்பகுதியில் பாதை அமைத்து தர வேண்டுமென மேட்டுமருதூர், மருதூர் பொதுமக்கள் ரயில்வே கோட்ட தலைமை பொறியாளர் கார்த்திகேயனிடம் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இருசக்கர வாகனம் சென்று வருவதற்கான பாதை அமைத்து தரப்படும் என கோட்ட தலைமை பொறியாளர் உறுதி அளித்தார்.

அப்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us