ADDED : பிப் 21, 2026 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மாசி தேர்த்திருவிழா, குண்டம் இறங்குதல் திருவிழா, 13 நாட்கள் நடந்தது. கோவிலுக்கு கடந்த அமாவாசையன்று வந்து, இரவு தங்கி வழிபட்ட லட்சக்கணக்கான பக்தர்கள், தெருவில் துாங்கியது, மனதை வேதனைப்படுத்துகிறது. பக்தர்களிடம் விதவிதமாக கட்டணம் சுரண்டிவிட்டு, எந்த ஒரு அடிப்படை வசதியும் அறநிலையத்துறை செய்து கொடுப்பதில்லை.
ஹிந்து கோவில்களில், திருவிழா காலங்களில் கூட, வசதிகளை செய்து தராமல், அலட்சியப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது. பல கோடி ரூபாய் வருவாய் வரும் கோவில்களில் கூட, தி.மு.க., ஆட்சியில் பக்தர்கள் அவதிப்படுவது வேதனைக்குரியது. ஆனால், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் நடக்கும் விழாக்களில், கலெக்டர் தலைமையில் அந்த மதத் தலைவர்களை அழைத்து, தேவையான ஏற்பாடுகளை கவனத்துடன், பணிவுடன் செய்து தருகிறது.
- காடேஸ்வரா சுப்ரமணியம்,
தலைவர், ஹிந்து முன்னணி.

