sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிவில் நீதிபதி பதவியில் பழங்குடியினர் ஆறு பேர்

/

சிவில் நீதிபதி பதவியில் பழங்குடியினர் ஆறு பேர்

சிவில் நீதிபதி பதவியில் பழங்குடியினர் ஆறு பேர்

சிவில் நீதிபதி பதவியில் பழங்குடியினர் ஆறு பேர்


ADDED : பிப் 17, 2024 12:16 AM

Google News

ADDED : பிப் 17, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், 245 சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடந்து முடிந்தது. இறுதியாக தேர்வானவர்களின் பட்டியலும் வெளியானது.

திருவண்ணாமலை மாவட்டம், புலியூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீபதி என்பவர், 23, வயதில் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றார். இவர், பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அரசாணையின் வழியே, ஸ்ரீபதி தேர்வாகி உள்ளார் என்றும், மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் இளம் வயதில் இந்த நிலையை எட்டியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும், அவரை பாராட்டியும், சமூக வலைதளத்தில் முதல்வர் பதிவு வெளியிட்டார்.

இந்த சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றவர்களில், பழங்குடியின பிரிவை சேர்ந்த ஆறு பேர் உள்ளனர். அவர்களில், ஸ்ரீபதி உள்ளிட்ட இருவர் பெண்கள்.






      Dinamalar
      Follow us