sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பேரூராட்சிகளை தரம் உயர்த்துவதில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் நேரு

/

பேரூராட்சிகளை தரம் உயர்த்துவதில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் நேரு

பேரூராட்சிகளை தரம் உயர்த்துவதில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் நேரு

பேரூராட்சிகளை தரம் உயர்த்துவதில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் நேரு


ADDED : ஜன 10, 2025 11:35 PM

Google News

ADDED : ஜன 10, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:“பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், அவ்வாறு தரம் உயர்த்தும் போது, தங்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும் என, பேரூராட்சி ஊழியர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அமைச்சர் நேரு தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, தி.மு.க., - அசோக்குமார், “பேராவூரணி பேரூராட்சியில், நான்கு சாலைகளில் மழைநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும். இப்பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?” எனக் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் நேரு, “பேரூராட்சியின் வருவாய், மக்கள்தொகை சரியாக இருந்தால், நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். தற்போது, 25 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.

“ஏற்கனவே, 490 பேரூராட்சிகள் இருந்தன. அவை தரம் உயர்த்தப்படும் போது, பேரூராட்சி பணியாளர்கள் தங்களுக்கு பதவி உயர்வு குறையும் என தெரிவித்துள்ளனர். அதை ஆய்வு செய்து, நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.






      Dinamalar
      Follow us