sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மும்மொழி கொள்கையை ஏற்று கொள்வதில் தவறு இல்லை ஐ.ஜே.கே., மாநில துணை பொதுச் செயலாளர் உதயசூரியன் கருத்து

/

மும்மொழி கொள்கையை ஏற்று கொள்வதில் தவறு இல்லை ஐ.ஜே.கே., மாநில துணை பொதுச் செயலாளர் உதயசூரியன் கருத்து

மும்மொழி கொள்கையை ஏற்று கொள்வதில் தவறு இல்லை ஐ.ஜே.கே., மாநில துணை பொதுச் செயலாளர் உதயசூரியன் கருத்து

மும்மொழி கொள்கையை ஏற்று கொள்வதில் தவறு இல்லை ஐ.ஜே.கே., மாநில துணை பொதுச் செயலாளர் உதயசூரியன் கருத்து


ADDED : பிப் 20, 2025 01:46 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க., தலைவர் அன்புமணி நடத்தும் போராட்டத்திற்கு ஐ.ஜே.கே., முழு ஆதரவு தரும். மும்மொழி கொள்கையை ஏற்று கொள்வதில் தவறில்லை. விருப்பப்பட்டவர்கள் படிக்கலாம். கட்டாயமாக்க கூடாது என்பதுதான் இந்திய ஜனநாயக கட்சியின் கருத்து. வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது ஹிந்தியை பயன்படுத்த வேண்டி உள்ளது. மொழி தெரியாமல் இருப்பதால் வேலைவாய்ப்பில் நமது குழந்தைகள் பின் தங்கி உள்ளனர்.

சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை வேலியே பயிரை மேய்கிறது. 1ம் வகுப்பு குழந்தையிலிருந்து பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. அரசு சட்டங்களை கடுமையாக மாற்ற வேண்டும். அப்போதுதான் பாலியல் தொந்தரவு நீங்கும்.

2026ல் பா.ஜ., கூட்டணி தொடருமா என்பது உயர் மட்ட குழு கூட்டம் கூட்டி முடிவு எடுப்போம். நடிகர் விஜயின் அரசியல் வருகை ஆரோக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அவர் வந்தால் முன்னேற்றம் வரும் என்றால் எங்கள் கூட்டணியில் த.வெ.க., வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை நாங்கள் விரும்புகிறோம்.

-உதயசூரியன்

மாநில துணை பொதுச் செயலாளர்

ஐ.ஜே.கே.,






      Dinamalar
      Follow us