அதிகாரத்தில் பகிர்வு கேட்பது தவறு கிடையாது; சொல்கிறார் திருமா
அதிகாரத்தில் பகிர்வு கேட்பது தவறு கிடையாது; சொல்கிறார் திருமா
UPDATED : பிப் 18, 2026 03:31 PM
ADDED : பிப் 18, 2026 02:42 PM

திருச்சி: ''எங்களுக்கு இந்த முறை அதிகாரத்தில் பகிர்வு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அது ஒன்றும் தவறு கிடையாது'' என காங்கிரஸ் கோரிக்கை குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் நேற்று செய்தியாளர்களை சந்திக்கும்போது காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் உள்ளது. அதில் குழப்பம் இல்லை என்ற கருத்தை அழுத்தமாக கூறியிருக்கிறார்.
ஆகவே திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. கட்டுக்கோப்பாக இருந்தே தேர்தலை சந்திக்கும், நாங்கள் ஒரு கூட்டணியை உருவாக்குவதிலும் அந்த கூட்டணியை பாதுகாப்பதிலும் அக்கறையோடு இருக்கிறோம். ஆகவே அந்த கூட்டணி எந்த வகையிலும், பாதிப்படைந்து விட கூடாது என்ற பொறுப்புணர்வில் விடுதலை சிறுத்தை கட்சி இருக்கிறது.
ஆட்சி அதிகாரம்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரம் கேட்கிறது. கொடுக்க முடியுமா? கொடுக்க முடியாதா என்பது குறித்து பேச்சுவார்த்தையில் தான் முடிவு செய்யப்படும். இப்படி கேட்பதால் ஒரு கூட்டணி உடைந்துவிடாது. கூட்டணி கட்சியில் இருப்பதால் உரிமையோடு கேட்கிறார்கள்.
உங்களுடைய வெற்றிக்காக நாங்களும் பாடுபடுகிறோம். இவ்வளவு காலமாக நாங்கள் உங்களுக்கு உழைத்திருக்கிறோம். அதனால் எங்களுக்கு இந்த முறை அதிகாரத்தில் பகிர்வு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது அது ஒன்றும் தவறு கிடையாது.
அழுத்தம்
ஒரு அணியில்
எனவே இன்றைக்கு எவ்வளவு இடம் கூடுதலாக ஒரு அணியில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, நாங்கள் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. இந்த கூட்டணியில் தான் நீடிப்போம். இந்த கூட்டணியில் எங்களுக்கான கோரிக்கை, என்னவோ அதை உரிமையோடு கேட்போம். பிரச்னை இல்லாத கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி தான். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
