ADDED : பிப் 06, 2024 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், வரும் 10ம் தேதி முதல், மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்' என கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவுகிறது. வரும் 9ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும். அதன்பின், 10ம் தேதி முதல், 12ம் தேதி வரை சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
அதாவது, தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், 12ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் நிலவும். அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

