அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும்: வானிலை மையம் தகவல்
அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும்: வானிலை மையம் தகவல்
ADDED : டிச 14, 2025 02:40 PM

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் நாளை அதிகாலை ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் நாளை (டிச.,15) அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக கடலோரப்பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 16ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

