sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'என் போனையும் ஒட்டு கேட்டிருக்காங்க' ராமதாஸ் அடுத்த குண்டு

/

'என் போனையும் ஒட்டு கேட்டிருக்காங்க' ராமதாஸ் அடுத்த குண்டு

'என் போனையும் ஒட்டு கேட்டிருக்காங்க' ராமதாஸ் அடுத்த குண்டு

'என் போனையும் ஒட்டு கேட்டிருக்காங்க' ராமதாஸ் அடுத்த குண்டு

1


ADDED : ஆக 05, 2025 03:39 AM

Google News

1

ADDED : ஆக 05, 2025 03:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தன் மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், இது பற்றி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், தான் அமரும் நாற்காலியின் கீழே, ஒட்டு கேட்பு கருவி வைக்கப்பட்டு இருந்ததாக, ராமதாஸ் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், 'ஒட்டு கேட்பு கருவியை வைத்தது, மகன் அன்புமணி தான்' என, கடந்த 2ம் தேதி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், தன் வீட்டில் உள்ள 'சிசிடிவி கேமரா'க்களில் பதிவான காட்சிகளை, ஒட்டு கேட்பு கருவி வாயிலாக வேறொரு இடத்தில் பதிவு செய்துள்ளதாக, தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் கண்டறிந்து, ராமதாசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், தன் மொபைல் போனும் ஒட்டு கேட்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ராமதாசுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us