சென்னையின் தற்போதைய நிலை இதுதான்: 3 சுரங்கப்பாதைகள் மூடல்!
சென்னையின் தற்போதைய நிலை இதுதான்: 3 சுரங்கப்பாதைகள் மூடல்!
ADDED : டிச 01, 2024 08:51 AM

சென்னை: சென்னையில் ரங்கராஜபுரம், கெங்குரெட்டி, மேட்லி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னையில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* ரங்கராஜபுரம், கெங்குரெட்டி, மேட்லி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கி உள்ளதால், அழகப்பா சாலை, லூப் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
* பர்னாபி சாலை, நாகேஸ்வரா பூங்கா, அண்ணா மேம்பாலம் சர்வீஸ் சாலை, ஸ்ரீ மான் ஸ்ரீநிவாசா சாலயைில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
* திருமலைபிள்ளை சாலையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
அழகப்பா சாலை மூடப்பட்டுள்ளது. அவ்வழியாக வரும் வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக திரும்பி நாயர் பாயிண்ட் சென்று ஈ.வி.ஆர்., சாலையை அடையலாம். லூப் சாலை (மூடப்பட்டது). அவ்வழியாக வரும் வாகனங்கள் சாந்தோம் ஹை ரோடு வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

