sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் நிலவரம் இதுதான்: கணித்து சொன்னது வானிலை மையம்!

/

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் நிலவரம் இதுதான்: கணித்து சொன்னது வானிலை மையம்!

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் நிலவரம் இதுதான்: கணித்து சொன்னது வானிலை மையம்!

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் நிலவரம் இதுதான்: கணித்து சொன்னது வானிலை மையம்!

3


ADDED : அக் 15, 2024 11:28 AM

Google News

ADDED : அக் 15, 2024 11:28 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை நிலவரம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும், நேற்றிரவு கனமழை கொட்டியது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நல்ல மழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.



சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாது கொட்டியது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையார், சைதாப்பேட்டை, கிண்டி என பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று (அக்.,15) மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புகள் உள்ளன.

மழைநீர் தேங்கும் போது, சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும். ஆங்காங்கே பாதுகாப்பற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us