sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சபாநாயகர், அமைச்சருக்கு எதிர்ப்பு கருப்புக் கொடியுடன் புறப்பட்டோர் கைது

/

சபாநாயகர், அமைச்சருக்கு எதிர்ப்பு கருப்புக் கொடியுடன் புறப்பட்டோர் கைது

சபாநாயகர், அமைச்சருக்கு எதிர்ப்பு கருப்புக் கொடியுடன் புறப்பட்டோர் கைது

சபாநாயகர், அமைச்சருக்கு எதிர்ப்பு கருப்புக் கொடியுடன் புறப்பட்டோர் கைது


ADDED : பிப் 13, 2025 07:50 PM

Google News

ADDED : பிப் 13, 2025 07:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:சபாநாயகர், அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலம் சென்ற 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் தனியார் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. சட்ட விதிமுறைகளை மீறி சந்தை செயல்பட்டு வருவதாகவும் அதற்கு பெறப்பட்ட நிலத்திலும் முறைகேடுகள் இருப்பதாகவும், பல்வேறு அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான கால்கோள் விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெற்கு திட்டங்குளம் பகுதியில் எதிர்ப்பு தெரிவித்து, ஆங்காங்கே கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.

இதற்கிடையே, எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், தமிழ் பேரரசு கட்சியினர், 5வது துாண் அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து கருப்பு கொடி ஏந்தி, ஊர்வலமாக தனியார் சந்தை நோக்கிச் சென்றனர். இதில் 24 பேரை கைது செய்த கோவில்பட்டி கிழக்கு போலீசார், அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.






      Dinamalar
      Follow us