sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலி பாஸ்போர்ட் மூன்று ஏஜன்ட் கைது

/

போலி பாஸ்போர்ட் மூன்று ஏஜன்ட் கைது

போலி பாஸ்போர்ட் மூன்று ஏஜன்ட் கைது

போலி பாஸ்போர்ட் மூன்று ஏஜன்ட் கைது


ADDED : ஏப் 16, 2025 08:38 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹிபால்பூர்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை போலி பாஸ்போர்ட்டில் கனடாவுக்கு அனுப்ப முயன்றதாக 3 ஏஜன்ட்களை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 10ம் தேதி, கமல்ஜீத் சிங் என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்த ஒருவர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கனடா நாட்டின் டொராண்டோவிற்கு விமானத்தில் ஏற முயன்றார்.

குடியேற்ற சோதனைகளின்போது, பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படம் அந்த நபருடன் பொருந்தாததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். விசாரித்ததில், அவர், பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியைச் சேர்ந்த மன்பிரீத் சிங், 40, என்பது தெரிய வந்தது.

போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு பயணம் செய்ய 32 லட்ச ரூபாய் பேசி, 20 லட்ச ரூபாய் கொடுத்ததாக மன்பிரீத் ஒப்புக்கொண்டார்.

அவர் கொடுத்த தகவலின்படி, ஏஜன்ட்களான ரூபேந்திரர், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் சவுத்ரி, 24, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விஷால் திமான், 27, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us