sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு

/

மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு

மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு

மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு


ADDED : பிப் 13, 2025 02:02 AM

Google News

ADDED : பிப் 13, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஸ்ரீபெரும்புதுார், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட, 16 மாநகராட்சிகளின் எல்லைகள், விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. மேலும், 41 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளின் எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிதாக, 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம்; காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார்; தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

அப்பகுதியின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம், வணிகம், தொழில் வளர்ச்சி உள்ளிட்டவை போன்றவற்றை கருத்தில் வைத்து, நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இவற்றின் விபரங்கள், தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us