sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அழுகிய நிலையில் இறந்து கிடந்த புலி: வனத்துறை விசாரணை

/

அழுகிய நிலையில் இறந்து கிடந்த புலி: வனத்துறை விசாரணை

அழுகிய நிலையில் இறந்து கிடந்த புலி: வனத்துறை விசாரணை

அழுகிய நிலையில் இறந்து கிடந்த புலி: வனத்துறை விசாரணை


ADDED : செப் 16, 2025 09:28 PM

Google News

ADDED : செப் 16, 2025 09:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: முதுமலை, மசினகுடி சீகூர் வனப்பகுதியில், அழுகிய நிலையில் புலி இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வன கோட்டம், சீகூர் வனப்பகுதியில் , காலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, உப்பல்லா நீரோடை பகுதியில் அழுகிய நிலையில் புலி இறந்து கிடந்தது. வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மசினகுடி துணை இயக்குனர் வித்யாதர், வனச்சரகர் சுரேஷ்பாபு அதன் உடலை ஆய்வு செய்து, விசாரித்தனர். முதுமலை, வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், மசினகுடி அரசு கால்நடை டாக்டர் இந்துஜா ஆகியோர் புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் புலிக்கு 5 வயது இருக்கும். மற்றொரு புலி தாக்கியதில் காயமடைந்து, அதன் காரணமாக இறந்திருக்கலாம். ஆய்வகப் பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. புலியின இறப்புக்கு வேறு காரணம் இருப்பின், ஆய்வக பரிசோதனை முடிவு கிடைத்த பின் தெரிய வரும்' என, கூறினர்.






      Dinamalar
      Follow us