sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூரில் ஆக., 4ல் வேலை நிறுத்தம்

/

சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூரில் ஆக., 4ல் வேலை நிறுத்தம்

சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூரில் ஆக., 4ல் வேலை நிறுத்தம்

சாய ஆலை பிரச்னைக்கு தீர்வு கோரி திருப்பூரில் ஆக., 4ல் வேலை நிறுத்தம்


ADDED : ஜூலை 26, 2011 12:28 AM

Google News

ADDED : ஜூலை 26, 2011 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : சாய ஆலை பிரச்னையில் முதல்வர் உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூரில் வரும் 4ம் தேதி பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாய ஆலை பிரச்னை தொடர்பாக அரசியல் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது. மா.கம்யூ., மாவட்ட செயலர் காமராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' முறையை பின்பற்றி இயக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளிக்க வேண்டும். சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.



பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தவர்களுக்கு, மத்திய - மாநில அரசுகள் மானியமாக வழங்கிய 320 கோடி ரூபாய், இன்னும் பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கவில்லை. அத்தொகை கிடைத்தால், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' முறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த உதவியாக அமையும். அந்நிதி கிடைக்கச் செய்ய வேண்டும். கண்காணிப்பு குழுக்களை விஸ்தரிப்பு செய்ய வேண்டும். சலவை பட்டறைகள் என்பது கெமிக்கல் அல்ல; சலவை பட்டறைகளை இயக்கினால், உள்நாட்டு தயாரிப்பு வர்த்தகத்தில் வேலை வாய்ப்பை பெற முடியும்.



சாய ஆலை பிரச்னையில் சாய ஆலை உரிமையாளர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், திருப்பூர், பல்லடம், காங்கயம் பகுதி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் அடங்கிய முத்தரப்பினரை அழைத்து பேசி, முதல்வர் இப்பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் ஆக., 4ம் தேதி காலை 6.00 மணி முதல், 5ம் தேதி காலை 6.00 மணி வரை, 24 மணி நேர பொது வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.



மா.கம்யூ., மாவட்ட செயலர் காமராஜ் கூறுகையில், ''தொழில் பாதிப்பால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். உள்ளூர் மக்களும் வேலை இழந்துள்ளனர். வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளில் கூட வியாபாரமில்லை. இதே நிலை தொடர்ந்தால், திருப்பூரின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார். கூட்டத்தில், மா.கம்யூ., - இந்திய கம்யூ., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., - சமத்துவ மக்கள் கட்சி - மனிதநேய மக்கள் கட்சி - பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us