திருவள்ளூர் சிறுமி பலாத்காரம்: மே.வங்கத்தை சேர்ந்தவர் கைது
திருவள்ளூர் சிறுமி பலாத்காரம்: மே.வங்கத்தை சேர்ந்தவர் கைது
ADDED : ஜூலை 25, 2025 06:48 PM

திருவள்ளூர்: திருவள்ளூரில் நடந்து சென்ற 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர்.
கடந்த, 12ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தில் தனியாக நடந்து சென்ற, 10 வயது சிறுமியை, மர்ம நபர் மாந்தோப்புக்குள் துாக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்தார். இது தொடர்பான வழக்கில், குற்றவாளியை கைது செய்ய, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க் மேற்பார்வையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., தலைமையில், மூன்று டி.எஸ்.பி.,க்கள் அடங்கிய 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டையில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த நபரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காட்டிய போது, அவர் குற்றவாளியை உறுதி செய்தார். இதனையடுத்து மேற்கு வங்கத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரை தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

