sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக ஆட்சியில் தமிழகத்தில் 7000 கொலைகள் நடந்துள்ளன: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

/

திமுக ஆட்சியில் தமிழகத்தில் 7000 கொலைகள் நடந்துள்ளன: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தமிழகத்தில் 7000 கொலைகள் நடந்துள்ளன: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தமிழகத்தில் 7000 கொலைகள் நடந்துள்ளன: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்

1


ADDED : டிச 17, 2025 03:45 PM

Google News

1

ADDED : டிச 17, 2025 03:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் 7000த்திற்கும் அதிகமான கொலைகள் நடந்திருக்கின்றன. இந்த ஆட்சியை மக்கள் எப்படி அங்கீரிப்பார்கள் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

சென்னை கிண்டியில், பாஜ உயர்மட்டக்குழு கூட்டம் இன்று (டிச.17) நடைபெற்றது. கூட்டத்திதற்கு பின் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது ;

எனது யாத்திரை சென்று கொண்டு இருக்கிறது. ஜன.9ம் தேதி யாத்திரை முடிகிறது. பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் நேரம் கேட்டு அழைப்பதாக முடிவு எடுத்துள்ளோம்.

நாளைய தினம் தேர்தல் வைத்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதை பார்க்க வேண்டும். 5ஆண்டுகால திமுக ஆட்சியில், சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிறைய நடந்து கொண்டு வருகிறது.

மாதம்தோறும் மின் கணக்கீடு என்பதை இன்னமும் நிறைவேற்றவில்லை. 7000த்திற்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கிறதுது. 10 வயது சிறுமி முதல் 70 வயது வயதானவர்கள் வரை ரோட்டில் நடமாட முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் நசுங்கி பலியாகி உள்ளனர்.

எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதை பொருட்கள் நடமாட்டம் இருக்கிறது. இதை எல்லாம் விட்டுவிட்டு இந்த ஆட்சியை மக்கள் எப்படி அங்கீகரிப்பார்கள்?

தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால், முரளிதர் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டிச. 23ம் தேதி வருவதாக உள்ளது.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us