ADDED : பிப் 21, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., சார்பில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ் உள்ளிட்ட, 21 உயர் பதவிகளுக்காக நடத்தப்படும், குடிமைப்பணி தேர்வின் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். மொத்தம், 979 காலி பணியிடங்களுக்கு, மே, 25ல் தேர்வு நடைபெற உள்ளது.
இதில் தேர்வானவர்களுக்கு, முதன்மை தேர்வு, நேர்காணல் தேர்வு என, மூன்று கட்ட தேர்வுகள் நடத்தப்படும்.
ஒட்டுமொத்த மதிப்பெண்களின் தரவரிசைப்படி பணியாணை வழங்கப்படும்.

