sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.2,000 நிவாரணம் வாங்க 'டோக்கன்' வினியோகம் துவக்கம்

/

ரூ.2,000 நிவாரணம் வாங்க 'டோக்கன்' வினியோகம் துவக்கம்

ரூ.2,000 நிவாரணம் வாங்க 'டோக்கன்' வினியோகம் துவக்கம்

ரூ.2,000 நிவாரணம் வாங்க 'டோக்கன்' வினியோகம் துவக்கம்


ADDED : டிச 06, 2024 03:58 AM

Google News

ADDED : டிச 06, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விழுப்புரம் உட்பட வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ரேஷன் கார்டுதாரர்கள், 2,000 ரூபாய் வாங்க, எந்த தேதியில் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்' வினியோகம், நேற்று துவங்கியுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பலரின் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மக்களின் வாழ்வாதாரம் முடங்கியதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ரேஷன் கார்டு அடிப்படையில் தலா, 2,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிவாரண தொகை, ரொக்க பணமாக ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களிடம் வழங்கப்பட உள்ளது. ஒரே சமயத்தில், அனைவரும் கூட்டமாக வருவதை தடுக்க, எந்த தேதி, எந்த நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய, 'டோக்கன்' வினியோகம், கார்டுதாரர்களின் வீடுகளில் நேற்று துவங்கியது.

இந்த பணியில், ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் தினமும் ஒரு கடையில் காலையில், 100 பேர், மாலையில், 100 பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us