ADDED : ஜன 23, 2026 06:48 AM

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியை, 2018ல் நடிகர் கமல் துவக்கினார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அக்கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அடுத்து, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், அதே சின்னத்தில் போட்டியிட்டது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அதற்கு பரிசாக, ராஜ்யசபா எம்.பி., பதவி, கமலுக்கு வழங்கப்பட்டது.
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், இரட்டை இலக்க தொகுதிகளை பெற்று கட்சிக்கு அங்கீகாரம் பெற, கமல் முடிவு செய்துள்ளார்.
எனவே, வரும் தேர்தலில், தங்கள் கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்க வேண்டும் என, ம.நீ.ம., கட்சி சார்பில் தேர்தல் கமிஷனில் விண்ணப்பிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட தேர்தல் கமிஷன், அக்கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னத்தை ஒதுக்கி உள்ளது.

