sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்

'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : ஆக 15, 2025 11:27 PM

Google News

ADDED : ஆக 15, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:தொடர் விடுமுறையை அடுத்து கொடைக் கானலில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுதந்திர தினம், விடுமுறை தினம் என 3 நாட்கள் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் நேற்று காலை முதலே வாகனங்களில் கொடைக்கானலில் முகாமிட்டனர்.

பெருமாள்மலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை சந்திப்பு என நகரில் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொது போக்குவரத்து வெகுவாக பாதித்தது. மாலைக்கு பின் இயல்பு நிலை திரும்பியது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. இங்குள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா,கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, வனச்சுற்றுலா தலம், மன்னவனுார் சூழல் சுற்றுலா தலத்தில் பயணிகள் குவிந்தனர்.

ஏரியில் படகு சவாரி, ஏரி சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து பயணிகள் மகிழ்ந்தனர். அவ்வப்போது தரையிறங்கிய மேகக் கூட்டம் என சில்லிடும் சீதோஷ்ண நிலையை பயணிகள் அனுபவித்தனர்.






      Dinamalar
      Follow us