sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மழையில் குடை பிடித்து பூக்களை ரசித்த சுற்றுலா பயணிகள்

/

மழையில் குடை பிடித்து பூக்களை ரசித்த சுற்றுலா பயணிகள்

மழையில் குடை பிடித்து பூக்களை ரசித்த சுற்றுலா பயணிகள்

மழையில் குடை பிடித்து பூக்களை ரசித்த சுற்றுலா பயணிகள்


ADDED : மே 07, 2025 03:24 AM

Google News

ADDED : மே 07, 2025 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று மதியம் சாரல் மழை பெய்த நிலையில் குடை பிடித்து பிரையன்ட் பூங்காவில் மலர்களை பயணிகள் ரசித்தனர்.

தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க குளு குளு நகரான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். நேற்று காலை நகரில் சுட்டெரிக்கும் வெயில் நீடித்த நிலையில் மதியத்திற்கு பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 3:00 மணிக்கு பின் மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை குடை பிடித்து பயணிகள் ரசித்தனர். நகரில் ஆங்காங்கே தரை இறங்கிய மேகக்கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலையை பயணிகள் ரசித்தனர். மாலை நகரை பனிமூட்டம் சூழ்ந்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.






      Dinamalar
      Follow us