sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கேப் ரோட்டில் போக்குவரத்து தடை

/

கேப் ரோட்டில் போக்குவரத்து தடை

கேப் ரோட்டில் போக்குவரத்து தடை

கேப் ரோட்டில் போக்குவரத்து தடை

1


ADDED : மே 31, 2025 01:38 AM

Google News

ADDED : மே 31, 2025 01:38 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 'கேப் ரோடு' வழியாக போக்குவரத்துக்கு தடை விதித்து இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.

கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு- போடிமெட்டு இடையே ரோடு அகலப்படுத்தும் பணி நடந்தது. அப்போது மூணாறில் இருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள கேப் ரோட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மலையை குடைந்து பாறைகள் உடைக்கப்பட்டன.

அதனால் மலை காலங்களில் கேப் ரோட்டில் நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இறுதியாக மே 12ல் பெய்த மழையில் பாறைகள் ரோட்டில் உருண்டு விழுந்து போக்குவரத்து தடைபட்டது.

இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்ததால் கேப் ரோடு வழியாக இரவில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.

அங்கு மண் மற்றும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி கேப் ரோடு வழியாக அடுத்த உத்தரவு வரும் வரை போக்குவரத்துக்கு முற்றுலுமாக தடை விதித்து கலெக்டர் விக்னேஸ்வரி நேற்று உத்தரவிட்டார்.

அதனால் மூணாறில் இருந்து பள்ளிவாசல், குஞ்சுதண்ணி, ராஜாக்காடு, ராஜகுமாரி வழியாக மாற்று வழியில் பூப்பாறை சென்று தேனி உள்பட பிற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனங்கள் உள்பட அவசர தேவைக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் கேப் ரோடு வழியாக அனுமதிக்கப்படுகிறது.

தடையை மீறுவோர் மீதுகடும் நடவடிக்கை: கலெக்டர்

இடுக்கி இம்மாவட்டத்தில் கனமழை தொடர்வதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பகுதிகளை மூடவும், அது தொடர்பான செயல்பாடுகளுக்கு தடை விதித்தும் நேற்று முன்தினம் கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார்.அதன்படி மாவட்ட சுற்றுலாத்துறை, வனத்துறை, மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம் ஆகியவற்றுக்கு சொந்தமான சுற்றுலா பகுதிகள், தனியார் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன. அதனை மீறி சில பகுதிகளில் நேற்று டிரக்கிங், ஜீப் சவாரி எனும் சாகச பயணம் நடத்தப்பட்டதாக தெரியவந்தது. தடை விதிக்கப்பட்ட சுற்றுலா தொடர்பான செயல்பாடுகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் விக்னேஸ்வரி உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் வாகன உரிமையாளர், டிரைவர், நிறுவன உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக பேரிடர் மேலாண்மை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உத்தரவில் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us