தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த இடத்தில் சோகம்; கார் மீது சரக்கு வாகனம் மோதி 4 பேர் பலி!
தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த இடத்தில் சோகம்; கார் மீது சரக்கு வாகனம் மோதி 4 பேர் பலி!
ADDED : ஜூலை 08, 2025 11:19 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சுற்றுலா வந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் அருகே குருங்களூர் பகுதியில், தஞ்சாவூர் விக்கிரவாண்டி சாலையில் சுற்றுலாவுக்கு வந்தவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சுற்றுலா வந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் குமார், அவரது மனைவி ஜெயா, நீலவேணி, துர்கா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குமாரின் மகள் மோனிஷா, மகன் ஸ்டாலின் மற்றும் சரக்கு வாகனம் டிரைவர் விக்னேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.