ADDED : டிச 03, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, புயல் பாதிப்பால் ரயில் சேவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு செல்ல, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாக, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருச்சி -- சென்னை ரயில் வழித்தடம் மற்றும் விழுப்புரம் -- காட்பாடி ரயில் வழித்தடங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டதால் ரயில்கள் நிறுத்தப்பட்டன. அதனால், பாதிக்கப்பட்ட ரயில் பயணியர் வசதிக்காக, சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
அதன்படி, மாம்பழப்பட்டு - 15, வெங்கடேசபுரம் - 15, விழுப்புரம் - 15, அரகண்டநல்லுார் ரயில் நிலையத்தில் இருந்து, 15 பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், சென்னை செல்லும் பயணியர் வசதிக்காக, கூடுதலாக, 40 பஸ்கள் என, 100 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.