sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுதானியம், நிலக்கடலை ஏற்றுமதியை அதிகரிக்க பயிற்சி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

/

சிறுதானியம், நிலக்கடலை ஏற்றுமதியை அதிகரிக்க பயிற்சி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

சிறுதானியம், நிலக்கடலை ஏற்றுமதியை அதிகரிக்க பயிற்சி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

சிறுதானியம், நிலக்கடலை ஏற்றுமதியை அதிகரிக்க பயிற்சி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

1


ADDED : ஏப் 04, 2025 05:07 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 05:07 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''சிறுதானியங்கள், நிலக்கடலை, பலா போன்றவற்றின் விற்பனை மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி பயிற்சி வழங்கப்படும்,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் வேளாண் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* முக்கிய பயிர்களின் சான்றளிக்கப்பட்ட விதைகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை, விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்காக, 25 கோடி ரூபாய் நிதியில், ஏழு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும்

* ரசாயன உரங்களின் தரத்தை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு தரமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, திருநெல்வேலி, கடலுார் மாவட்டங்களில், 6 கோடி ரூபாய் செலவில், உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்படும்

* வேளாண் விளைபொருட்களின் சேமிப்பு காலத்தை நீட்டிக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மற்றும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்

* திருவாரூர் இடும்பாவனம், திண்டுக்கல் வேடசந்துார், திருவள்ளூர் போந்தவாக்கம், தஞ்சாவூர், ஈரோடு கள்ளிப்பட்டி ஆகிய ஐந்து இடங்களில், வேளாண் விரிவாக்க மையங்களில், 3.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விதை சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்

* அதிக வரத்து காலங்களில் மாம்பழங்கள் வீணாவதை தடுத்து, விவசாயிகள் வருமானம் பெறுவதற்காக, வங்கி கடன் உதவியுடன் எட்டு நபர்களுக்கு, தலா 12.25 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி, மாம்பழ கூழ் தயாரிப்பு கூடங்கள் அமைக்கப்படும்

* பயிர்களுக்கு ஏற்ப உர பரிந்துரைகளை வழங்கும் வகையில், 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சேலம் மாவட்டத்தில், நடமாடும் மண் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும்

* சிறுதானியங்கள், நிலக்கடலை, பலா ஆகியவற்றின் விற்பனை மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு, உழவர் உற்பத்தியாளர்நிறுவனங்களுக்கு ஏற்றுமதி பயிற்சி மற்றும் வர்த்தக இணைப்பு கூட்டம் நடத்தப்படும்

* விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதை உறுதி செய்ய, ஒருங்கிணைந்த தரக் கட்டுப்பாட்டு பிரிவு துவங்கப்படும்

* விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட, 1000 பேருக்கு வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் இயந்திரங்களை இயக்கவும், பராமரிக்கவும் பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.






      Dinamalar
      Follow us