sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'மின்மாற்றி கொள்முதல் ஊழல் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்'

/

'மின்மாற்றி கொள்முதல் ஊழல் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்'

'மின்மாற்றி கொள்முதல் ஊழல் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்'

'மின்மாற்றி கொள்முதல் ஊழல் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்'


ADDED : செப் 28, 2024 02:40 AM

Google News

ADDED : செப் 28, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தமிழக மின் வாரியத்திற்கு 400 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மின்மாற்றி கொள்முதல் ஊழல் வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக மின் வாரியத்திற்கு, 2021 முதல் 2023 வரை, அதிக விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில், 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. அதன் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மின்மாற்றிகளை வாங்குவதில் திட்டமிட்ட கூட்டுச்சதி நடந்துள்ளது. ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு, சந்தை விலையை விட 50 சதவீதம் கூடுதலாக குறிப்பிட்டு உள்ளனர்.

ஏலத்தில் பங்கேற்ற அனைத்து ஒப்பந்ததாரர்களும், சந்தை விலையை விட அதிக விலையை குறிப்பிடுவது இயல்பாக நடக்க வாய்ப்பில்லை.

மின்மாற்றி கொள் முதல் ஊழலில் விசாரிக்கப்பட வேண்டியவர், மின் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. ஊழல் வழக்கில் கைதாகி 471 நாட்களுக்குப் பின் விடுதலையான அவரை பெரும் தியாகம் செய்தவர் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டுகிறார். செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அரசு இயந்திரமே செயல்படுகிறது. இதனால், மின்மாற்றி கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் நியாயம் கிடைக்காது.

எனவே, மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us