ADDED : பிப் 27, 2026 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தி.மு.க., முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என்.நேரு அ றிக்கை:
அடுத்த மாதம் 9ல் நடக்கும் திருச்சி மாநாடு தான், வரும் சட்டசபை தேர்தலுக்கான, 'மெயின் பிக்சர்' ஆக அமைய உள்ளது. தி.மு.க., மாநாட்டில், 10 லட்சம் பேர் பங்கேற்கும் ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும்.
வாகனங்களை நிறுத்தும் வசதி, போக்குவரத்து வழித்தட ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட வசதியாக, அந்தந்த மாவட்டங்களில் இருந்து புறப்படும் வாகன விபரங்களை, மார்ச் 1க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மாநாட்டு திடலுக்கு உரிய நேரத்திற்கு நிர்வாகிகள் வந்து விடுவதையும், அந்தந்த மாவட்டச் செயலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

