sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் பறக்கும் படை போல நடித்து பணம் பறிக்க முயற்சி

/

தேர்தல் பறக்கும் படை போல நடித்து பணம் பறிக்க முயற்சி

தேர்தல் பறக்கும் படை போல நடித்து பணம் பறிக்க முயற்சி

தேர்தல் பறக்கும் படை போல நடித்து பணம் பறிக்க முயற்சி


ADDED : மார் 19, 2024 11:20 PM

Google News

ADDED : மார் 19, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் போல நடித்து, பணம் பறிக்கும் கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

லோக்சபா தேர்தலை ஒட்டி, தனி நபர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, மாநிலம் முழுவதும், 702 பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், போலீசாரும் இடம் பெற்றுள்ளனர்.

எனினும், மர்ம நபர்கள், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் போல நடித்து, பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக, காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அடையாள அட்டை அணிந்து இருப்பர். இவர்கள் தங்களை அறிமுகம் செய்து சோதனையில் ஈடுபடுவர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்தால், உடனடியாக அவசர போலீஸ் எண் 100 மற்றும் 112க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மர்ம நபர்களிடம், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us