sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு; உறவுகள் கண்ணீர் அஞ்சலி

/

இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு; உறவுகள் கண்ணீர் அஞ்சலி

இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு; உறவுகள் கண்ணீர் அஞ்சலி

இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு; உறவுகள் கண்ணீர் அஞ்சலி

2


UPDATED : டிச 26, 2024 10:56 AM

ADDED : டிச 26, 2024 10:36 AM

Google News

UPDATED : டிச 26, 2024 10:56 AM ADDED : டிச 26, 2024 10:36 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்திய சுனாமி ஆழிப்பேரலை நினைவு தினம் இன்று. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ல் நிகழ்ந்த சுனாமியில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பத்தினர், கடலில், பால், பூ மிதக்க விட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Image 1361441

சுமத்ரா கடல் பகுதியில் 9.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் காரணமாக இழந்த சுனாமி, இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோர பகுதிகளை வாரி சுருட்டியது. உயிர் சேதத்துடன், கோடிக் கணக்கில் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது.

Image 1361442

அந்த சோக சம்பவத்தின் நினைவு தினமான இன்று, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார், வானகிரி உள்ளிட்ட 28 கிராமங்களிலும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Image 1361443

தரங்கம்பாடியில் மீனவர்கள் கடற்கரையில் திதி கொடுத்து, கடலில் பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். பின்னர் அவர்கள் அமைதி ஊர்வலமாக சென்று சுனாமி நினைவு ஸ்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கினர்.

Image 1361446சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் 20ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு உயிர் நீத்தவர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நினைவு அஞ்சலி செலுத்தினார்.

Image 1361444

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், தோமையார்புரம், கூத்தன்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை உள்ளிட்ட பகுதிகளில், கடலில் பூக்கள் தூவி, பால் ஊற்றி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Image 1361445

கடலுாரில் கடலில் பால் ஊற்றி உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us