sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிலமோசடி வழக்கில் இருவர் கைது

/

நிலமோசடி வழக்கில் இருவர் கைது

நிலமோசடி வழக்கில் இருவர் கைது

நிலமோசடி வழக்கில் இருவர் கைது


ADDED : ஆக 08, 2011 02:17 AM

Google News

ADDED : ஆக 08, 2011 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியில் நில மோசடி வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை அபிராமபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டியை சேர்ந்த தனது சகோதரர் சேதுராமனிடம் 54 சென்ட் இடத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தார். இதே பகுதியை சேர்ந்த லட்சுமணமூர்த்தி(45), அந்த இடத்தை தனக்கு விலைக்கு தருமாறு, பாலமுருகனை கேட்டபோது, மறுத்துவிட்டார். இதையடுத்து கடந்த ஜூலை 5 ல் லட்சுமணமூர்த்தி சிலருடன் வந்து, பாலமுருகனை நிலத்திற்குள் வரக்கூடாது என்றும், நிலத்தை தான் விலைக்கு வாங்கிவிட்டாத கூறி மிரட்டியுள்ளார்.

பாலமுருகன், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் சென்று பார்த்த போது, லட்சுமணமூர்த்தியின் மகன் பிரபு கிருஷ்ணா பெயரில் பதிவு செய்யப்பட்டு, அவர் மைனர் என்பதால், தந்தை, லட்சுமணமூர்த்தியை கார்டியனாக போட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து பாலமுருகன், திண்டுக்கல் எஸ்.பி., சந்திரசேகரிடம் புகார் செய்தார். வழக்கை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ரெங்கசாமி மற்றும் லட்சுமணமூர்த்தி ஆகியோரை கைது செய்து திண்டுக்கல் ஜே.எம்., 2 கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us