sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரட்டை இலை சின்னம்: முடிவெடுக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு

/

இரட்டை இலை சின்னம்: முடிவெடுக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு

இரட்டை இலை சின்னம்: முடிவெடுக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு

இரட்டை இலை சின்னம்: முடிவெடுக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு

14


ADDED : டிச 04, 2024 12:55 PM

Google News

ADDED : டிச 04, 2024 12:55 PM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் 4 வாரத்திற்குள் கேட்க வேண்டும்' என தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'அ.தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னை இருப்பதால் இரட்டை இலை தொடர்பாக, முடிவெடுக்க கூடாது. அ.தி.மு.க.,வின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது' என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு இன்று (டிச.,04) நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அமர்வு விசாரித்தது. 'அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் 4 வாரத்திற்குள் கேட்டு முடிவெடுக்க வேண்டும்' என தேர்தல் கமிஷனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.






      Dinamalar
      Follow us