ADDED : மார் 12, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ லிங்கம், 55, செங்கல் சூளை தொழிலாளி. இவரது மகன் செல்வா, 19, தன் பைக்கை, சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றின் அருகே நிறுத்தி இருந்தார். பைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
காலையில் எடுத்துக் கொள்ளலாம் என்று குடும்பத்தினர் கூறியும் கேட்காமல், நள்ளிரவில் உறவினர் செல்வன், 35, என்பவருடன் ஸ்ரீலிங்கம் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். சிறிது நேரத்தில் இருவரும் மூச்சுத்திணறி இறந்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த பைக்கில் இருந்து பெட்ரோல் கசிந்து, அதிலிருந்து உருவான விஷவாயு தாக்கி இருவரும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கன்னியாகுமரி போலீசார் விசாரிக்கின்றனர்.

