sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மலை கோவில் பிரகாரத்தில் பிரியாணி சாப்பிட்ட இருவர்

/

தி.மலை கோவில் பிரகாரத்தில் பிரியாணி சாப்பிட்ட இருவர்

தி.மலை கோவில் பிரகாரத்தில் பிரியாணி சாப்பிட்ட இருவர்

தி.மலை கோவில் பிரகாரத்தில் பிரியாணி சாப்பிட்ட இருவர்

18


ADDED : ஜூன் 10, 2025 06:00 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 06:00 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் இருவர் பிரியாணி சாப்பிட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். நேற்று மதியம், 1:00 மணியளவில், ஆண், பெண் என இருவர், ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து முட்டை, இறைச்சியுடன் பிரியாணி சாப்பிட்டனர்.

அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அளித்த தகவலில், அவர்கள் இருவரையும் கோவில் ஊழியர்கள் பிடித்து, திருவண்ணாமலை டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவிலின், நான்கு கோபுர வாயில்களிலும் பக்தர்களை சோதனை செய்த பின்பே அனுமதிக்க, போலீசார் பணியில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கண்டுகொள்ளாமல், பக்தர்களை உள்ளே செல்ல அனுமதிப்பதால், இதுபோன்று அசைவ உணவுகளை கோவிலுக்குள் எடுத்து சென்று சாப்பிடும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டினர்.






      Dinamalar
      Follow us