sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு

/

நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு

நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு

நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு


ADDED : மே 06, 2025 12:51 AM

Google News

ADDED : மே 06, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த இருவர், நிரந்தர நீதிபதிகளாக நேற்று பொறுப்பேற்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பவானி சுப்புராயன், ஹேமலதா, நக்கீரன், சிவஞானம் ஆகிய ஐந்து நீதிபதிகள், இம்மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர். இதன் காரணமாக, நீதிபதிகளின் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, 15 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், கர்நாடகா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஹேம்ந்த் சந்தன் கவுடர், தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகிய இருவரை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த நீதிபதிகள் சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இருவருக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.






      Dinamalar
      Follow us