ADDED : ஜன 09, 2026 02:06 AM

'தி.மு.க., ஹிந்துக்களுக்கு எதிரானதல்ல' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படியெனில் சனாதன தர்மத்தை, அதாவது ஹிந்து மதத்தை அழிப்பேன் என துணை முதல்வர் உதயநிதி கூறியது தவறு என மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், 4,000 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசுக்கும், கோவில் கும்பாபிஷேகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. பக்தர்களின் நன்கொடை, காணிக்கையால் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகம் நடத்த, 1 ரூபாய் கூட அரசு செலவழிப்பதில்லை. தி.மு.க., ஆட்சியில், 997 கோவில்களுக்கு சொந்தமான, 7,701 கோடி ரூபாய் மதிப்பிலான 7,655 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் இது. நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தான் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,

