அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கும் ஊதியம் சங்க நிர்வாகி கோரிக்கை
அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கும் ஊதியம் சங்க நிர்வாகி கோரிக்கை
ADDED : நவ 26, 2025 01:03 AM

விருதுநகர்: அலுவலக உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.15,700 ஊதியத்திற்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கும் அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் குருநாகப்பன் கூறினார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 13 ஆயிரம் கிராம உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 11ஆயிரத்து 100 என்ற ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே எங்கள் நிலையில் உள்ள அலுவலக உதவியாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்கப்படுகிறது.
எனவே தமிழக அரசு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்.
மேலும் கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வும் தாமதமாகிறது. இறந்த, ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.
வி.ஏ.ஓ.,வில் இருந்து உதவியாளர் பதவி உயர்வு பெற 10 ஆண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற காலவரையறையை 6 ஆண்டுகளாக மாற்றம் செய்தது போல், கிராம உதவியாளரில் இருந்து வி.ஏ.ஓ., பதவி உயர்வு பெற 10 ஆண்டு எனும் கால வரையறையை 6 ஆண்டுகளாக மாற்ற வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் கிராம உதவியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், என்றார்.

