sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்த கால அவகாசம் வி.ஏ.ஓ., விவசாய சங்கம் வலியுறுத்தல்

/

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்த கால அவகாசம் வி.ஏ.ஓ., விவசாய சங்கம் வலியுறுத்தல்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்த கால அவகாசம் வி.ஏ.ஓ., விவசாய சங்கம் வலியுறுத்தல்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்த கால அவகாசம் வி.ஏ.ஓ., விவசாய சங்கம் வலியுறுத்தல்


ADDED : நவ 13, 2024 11:40 PM

Google News

ADDED : நவ 13, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் கட்டுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என வி.ஏ.ஓ., மற்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் செப்., 15 முதல் நவ., 15 வரை நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கு, விவசாயிகள் வி.ஏ.ஓ.,க்களிடம் அடங்கல் பெற்று, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு பிரீமிய தொகையை கட்ட வேண்டும். ஏக்கருக்கு ரூ.30,120 இழப்பீடு தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரீமிய தொகையாக ஏக்கருக்கு ரூ.451.80 வீதம் செலுத்த வேண்டும்.

அதனை தொகை செலுத்த இரண்டு நாட்களே (நவ.,15) உள்ள நிலையில் தீபாவளி, ஆயுதபூஜை விடுமுறை வந்ததால் அலுவலகங்கள், தேசிய மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பிரீமிய தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

பெரும்பாலான மாவட்டங்களில் அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே பிரீமிய தொகை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என வி.ஏ.ஓ., மற்றும் விவசாயிகள் சங்கம் அரசை வலியுறுத்தி வருகிறது.

முதல்வரிடம் கோரிக்கை


கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் ஆர். அருள்ராஜ் கூறியதாவது: பண்டிகை கால விடுமுறையால் அரசு அலுவலகங்கள் செயல்படாத நிலையில் அடங்கல் பெறுதல், வங்கியில் பிரீமிய தொகை செலுத்த முடியாமல் விவசாயிகள் தவித்தனர். அவர்களின் நலன் கருதி, பிரதமரின் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

பயிர் காப்பீடு அவகாசம் தேவை


விவசாய சங்க தலைவர் ஏ.அருளாந்து கூறியதாவது: மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவ மழையால் உரிய நேரத்தில் நெற்பயிர்களை நடவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தான் விவசாயிகள் நெல் நடவு பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தொடர் அரசு விடுமுறையால் அடங்கல் பெற்று, பிரீமியம் செலுத்த முடியவில்லை. எனவே அரசு காப்பீடு திட்ட கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

மத்திய அரசு முடிவெடுக்கும்


வேளாண்மை துறை அதிகாரி கூறியதாவது: சிவகங்கை, ராமநாதபுரம், கடலுார், புதுக்கோட்டை போன்ற மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வைத்த கோரிக்கையின் விளைவாக இம்மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மாநில அரசு, மத்திய அரசிடம் ஆலோசனை செய்து, கால அவகாசம் வழங்குவது குறித்து முடிவு செய்யும் என்றனர்.






      Dinamalar
      Follow us