பாம்பை வளர்த்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வாசன்
பாம்பை வளர்த்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வாசன்
ADDED : ஜன 01, 2025 04:40 AM

மதுரை : அதிவேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்து பலரையும் ஈர்த்தவர் வாசன். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டி, 'வீலிங்' செய்தபோது விபத்தில் சிக்கி, கைது செய்யப்பட்டார்.
பின், சென்னையில் இருந்து மதுரை வழியாக சென்ற போது, அலைபேசியில் பேசியவாறே கார் ஓட்டிய வழக்கிலும் கைதானார்.
இவரது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், திருப்பதி கோவிலுக்குச் சென்றபோது பக்தர்களை, 'பிராங்க்' செய்யும், அதாவது கேலி செய்யும் வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில், 'பப்பி' என்று பெயரிட்டு, 2 வயது சிறிய மலைப்பாம்பை வளர்த்து வருவதை வீடியோவாக வெளியிட்டு அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து, அவரது வழக்கறிஞர்கள் அய்யப்பராஜா, முருக கணேசன் கூறியதாவது: இப்பாம்பு நைஜீரிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கேரளாவில் விற்கப்பட்டது. அங்கிருந்து சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் வாங்கி, கோவையில் விற்றுள்ளார். அங்கிருந்து அதை, வாசன் முறைப்படி ஆவணங்களுடன் வாங்கியுள்ளார். போலீசார் சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

